நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'புஷ்பா'. அப்படம் தமிழகத்திலும் நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தாலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் இங்கும் ஹிட் ஆகின.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இரண்டாம் பாகத்திற்கான பாடல் இசைக்கோர்ப்பு வேலைகளை செக் குடியரசில் உள்ள பராகுவே நகரில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாடலாசிரியர் சந்திரபோஸ் அதற்கான ஆலோசனைகளில் உள்ளனர். இது குறித்த தகவலை இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதா வெளியிட்டுள்ளார்.