நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னதாக ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக தான் மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளதாக கூறியிருப்பதால் அந்த படம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம் முதல் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதுதான்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடிப்பது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, ‛‛இயக்குனர் ராஜமவுலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.