ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.