நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவரது தந்தை ஜோஷி துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டியை வைத்து கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் என ஒன்று கூட அதில் இல்லை. அதையடுத்து இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அந்தவகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா நடிக்கும் பட்சத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இது அமையும் என்று சொல்லலாம்.