விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவரது தந்தை ஜோஷி துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டியை வைத்து கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் என ஒன்று கூட அதில் இல்லை. அதையடுத்து இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அந்தவகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா நடிக்கும் பட்சத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இது அமையும் என்று சொல்லலாம்.