நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் 'சித்து +2' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஆக்டிவாக நடித்து வரும் சாந்தினிக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார். நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் கவர்ச்சிக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு திரையுலகை விட்டு விலகிவிடுவார்கள். ஆனால், நடன இயக்குநர் நந்தா மாஸ்டரை திருமணம் செய்து கொண்ட சாந்தினி, அதன்பிறகு தான் கவர்ச்சிக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறார்.
சமீபகாலங்களில் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை வசியம் செய்து கட்டிப்போட்டு வருகிறது. அந்த அளவிற்கு கிளாமர் காட்டி வரும் சாந்தினி தற்போது கடற்கரையில் அழகு தவளும் மேனியுடன் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் சாந்தினியின் மூச்சு முட்ட வைக்கும் அழகு ரசிகர்கள் பலரையும் திக்குமுக்காட செய்து வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் தாழம்பூ தொடரின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த சாந்தினி தற்போது ஜீ தமிழின் ரெட்டை ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.