அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. அதைத்தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சற்று பிரபலமானார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்துள்ள காட்டேரி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
இவர் பதிவிட்டுள்ளதாவது : ‛‛சலுகை பெற்றவர்கள் ஏணியில் ஏறுவதற்கு எளிதாக வழி கிடைப்பதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பாத்துக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் நெப்போடிசம் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதேசமயம் வாரிசு நட்சத்திரங்களுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.