ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கும் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்.
இந்த நிலையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கடலுக்கு அடியிலும் நடத்தி உள்ளார்கள். அதாவது கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 100 அடி ஆழத்திற்கு சென்று அஜித்தின் பேனர்களை வைத்துள்ளார்கள். அது குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.