பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'செம்பருத்தி'. 1400 எபிசோடுகளை கடந்த இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி அண்மையில் பிரம்மாணடமாக படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சீரியலின் வெற்றி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முக்கிய நடிகர்கள் அனைவரையும் குறித்து மேடையில் பேசப்பட்டது. ஆனால், வில்லியாக நடித்திருந்த வீஜே மவுனிகாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த வீஜே மவுனிகா தனது இன்ஸ்டாவில் இதை குறிப்பிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், 'செம்பருத்தி தொடருக்காக எனது பெஸ்டை கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு அதை திருப்பி தரவில்லை. நீங்கள் செம்பருத்தி தொடரின் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டாடினீர்கள். ஆனால், என்னை ஏன் மதிக்கவில்லை?. என்னை ஏன் அழைக்கவில்லை?. எங்கே எனக்கான விருது?. நீங்கள் என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள். ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர், கொண்டாடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி' என கூறியுள்ளார்.
வீஜே மவுனிகா செம்பருத்தி தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்து கொடுத்துள்ளார். அப்படியிருக்க ஒரு சீரியலின் வில்லி நடிகைக்கு எப்படி தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்காமல் போனது என பலரும் மவுனிகாவிற்கு ஆதரவாக கேள்வி கேட்டு வருகின்றனர்.