ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை நடிகையான நக்ஷத்திராவுக்குவும், ஜீ தமிழ் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் விஷ்வாவுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்கள் மத்தியில் டாப் செலிபிரேட்டியாக வலம் வரும் நக்ஷத்திராவின் நிச்சயதார்த்தமும் சரி திருமணமும் சரி எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், சக நடிகர் நடிகைகள் கூட கலந்து கொள்ளாத நிலையில் யாருக்கும் தெரியாமல் மிக அவசரமாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, நடிகை ஸ்ரீநிதி, நக்ஷத்திராவின் காதலர் பற்றி பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்ததால் இந்த அவசர திருமணத்திற்கான காரணம் என்ன? என்று ரசிகர்களே நக்ஷத்திராவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நக்ஷத்திரா வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'என் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, தான் எங்கள் திருமணம் ஒரேநாளில் முடிவு செய்யப்பட்டு அவசரமாக நடந்து முடிந்தது. எனக்கு பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை. நெருங்கிய நண்பர்களை கூட கூப்பிட முடியவில்லை' என்று கூறியுள்ளார்.