படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மாஜி ஹீரோயின்களான குஷ்புவும், ரம்பாவும் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடா நாட்டுக்கு சென்றபோதும் அவர்களின் நட்பு விட்டுப்போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் சென்னை வந்தபோது தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குஷ்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது தோழி ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவருடன் பிரியாணி சாப்பிட்டதும் அவரது குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.