ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

‛விருமன்' இசை வெளியீட்டிற்காக மதுரை வந்த நடிகர் கார்த்தி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.
முத்தையாக இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது. இரவு 11 மணிக்கு வரை இந்த இசை வெளியீடு நீடித்தது. இந்நிலையில் கார்த்தி இன்று காலை ஆறு மணி அளவில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார்.
கார்த்தி கூறுகையில், ‛‛பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்றும் தெரிவித்தார்.