ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் |
ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்கும் புதிய படத்தை வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக புதுமுகம் நடிக்கிறார்.
டிக்கிலோனா படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் பீம் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.
கன்னடத்தில் அறிமுகமான ஷெரின் கான்ஞ்சனவாலா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழக்கு வந்தார். அதன்பிறகு சந்தானம் ஜோடியாக டிக்கிலோனா படத்தில் நடித்தார், தற்போது யோகிபாபுவுடன் சூ கீப்பர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.