ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரையில் வீஜேவாக என்ட்ரியான பிரஜினுக்கு உண்மையில் படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் வீஜே மற்றும் சீரியல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்த பிரஜின் விஜய் டிவியின் 'சின்னத்தம்பி' சீரியலின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்தை அடைந்தர். தொடர்ந்து அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தால் ஆகிய தொடர்களில் கமிட்டான பிரஜினுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அந்த சீரியல்கள் அனைத்தும் விரைவிலேயே சில காரணங்களால் முடித்து வைக்கப்பட்டன. இதற்கிடையில் பிரஜினுக்கு சினிமா வாய்ப்புகள் மீண்டும் கதவை தட்ட, தற்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. இதன் காரணமாக தான் 'இனி சீரியலில் நடிக்க மாட்டேன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்' என சோஷியல் மீடியாவில் லைவ் வந்த பிரஜின் ரசிகர்களிடம் கூறியுள்ளார். பிரஜினின் 'டி3' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவரின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.