'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆலியா தற்போது தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே நடிகைகள் தாய்மை அடைந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டும் நடிக்க வருவார்கள். ஆனால், அம்மாவானா பின்னும் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என ஆலியா தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருப்பதால் ஓய்வில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' படங்களில் நடித்து முடித்துள்ள ஆலியா, 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பின் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.