ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆலியா தற்போது தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே நடிகைகள் தாய்மை அடைந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டும் நடிக்க வருவார்கள். ஆனால், அம்மாவானா பின்னும் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என ஆலியா தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருப்பதால் ஓய்வில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' படங்களில் நடித்து முடித்துள்ள ஆலியா, 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பின் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.