புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டான்' படம் வியாபார ரீதியில் லாபமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படம் அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21 படம் பற்றிய அறிவிப்பும் பொங்கல் தினத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏழு மாதங்களாகியும் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமாக 'மாவீரன்' படத்தின் அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் எத்தனையாவது படம் என அறிவிக்காமல், சிவகார்த்திகேயயின் அடுத்த படம் என்றே அறிவித்தார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று(ஆக., 3) முதல் ஆரம்பிக்க உள்ளார்களாம்.
அப்படி என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் 21வது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.