இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், சமந்தாவும் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்கள். அதையடுத்து அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்காத நிலையில், சமீபத்தில் ‛காபி வித் கரண்' சீசன் 7வது நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார் சமந்தா. திருமண வாழ்க்கை குறித்து அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அந்த குழப்பமான காலகட்டத்தில் இருந்து தான் வெளியே வந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட நாகசைதன்யா, அமீர் கானுடன் இணைந்து தான் நடித்துள்ள லால்சிங் சத்தா படம் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அப்போது அவரிடத்தில் சமந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ‛‛நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகப்படியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை'' என்று சமந்தா குறித்த கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாகசைதன்யா .