நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை : தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், எஸ். தாணு ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அன்புச் செழியன். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரிப்பு, விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். இன்றைக்கு தமிழில் பல படங்கள் உருவாகின்றன. அதில் பல படங்களுக்கு இவரின் பைனான்ஸ் இல்லாமல் இருக்காது. முன்னணி தயாரிப்பாளர்கள் தொடங்கி, நடிகர் வரை இவரிடம் பைனான்ஸ் பெற்று படங்கள் தயாரித்து வருகின்றனர். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தியுள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேப்போன்று அஜித்தை வைத்து விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்னும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் அதிகாரிகளின் சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.