புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சென்னை : தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், எஸ். தாணு ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அன்புச் செழியன். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரிப்பு, விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். இன்றைக்கு தமிழில் பல படங்கள் உருவாகின்றன. அதில் பல படங்களுக்கு இவரின் பைனான்ஸ் இல்லாமல் இருக்காது. முன்னணி தயாரிப்பாளர்கள் தொடங்கி, நடிகர் வரை இவரிடம் பைனான்ஸ் பெற்று படங்கள் தயாரித்து வருகின்றனர். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தியுள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேப்போன்று அஜித்தை வைத்து விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்னும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் அதிகாரிகளின் சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.