22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று(ஆக.,1) முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழில்தான் எடுத்து வருகிறார்களாம். தெலுங்கில் டப்பிங் செய்துதான் வெளியிடப் போகிறார்களாம். ஸ்டிரைக்கில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறாது. மற்ற மொழிப் படங்களுக்கு ஒத்துழைப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்களாம். அதனால்தான், விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே, மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.