படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று(ஆக.,1) முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழில்தான் எடுத்து வருகிறார்களாம். தெலுங்கில் டப்பிங் செய்துதான் வெளியிடப் போகிறார்களாம். ஸ்டிரைக்கில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறாது. மற்ற மொழிப் படங்களுக்கு ஒத்துழைப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்களாம். அதனால்தான், விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே, மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.