ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முன்னதாக இவர் இயக்கியிருந்த 'கோலங்கள்' சீரியல் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே கான்செப்ட்டில் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை இயக்கி வருகிறார். இல்லத்தரசிகளை தாண்டி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கில் 'உப்பென்னா' என்ற பெயரிலும் மலையாளத்தில் 'கனல்பூவு' என்ற ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், மிக விரைவில் கன்னடத்திலும், வங்காள மொழியிலும் எதிர்நீச்சல் சீரியல் ரீமேக் செய்யப்பட உள்ளது. கயல் சீரியலுக்கு அடுத்தப்படியாக 'எதிர்நீச்சல்' தான் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.