ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, ராஜா ராணி 2 சீசனில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது. எனவே, அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதியினர் ஆல்யாவின் கம்பேக் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு யூ-டியூப் சேனலில் பதிலளித்துள்ளனர்.
அந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளை சஞ்சீவ் ஆல்யாவிடம் கேட்க அதற்கு ஆல்யா பதிலளிக்கிறார். அப்போது 'பழைய ஆல்யாவ எப்போது பாக்கலாம்? எப்பதான் கம்பேக் கொடுப்பீங்க?' என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'ஷூட்டிங் போனா ஒழுங்க டயட் இருக்கனும். ஆன் டைம்ல தூங்கி எந்திரிக்கனும். அதனால, கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டு, நல்ல சாப்பிட்டு ஆரோக்கியமாகனும். அப்புறம் வொர்க்-அவுட் செஞ்சு ட்ரிம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் போகலாம்' என கூறியுள்ளார். ஆல்யாவின் இந்த பதிலால் அவர் கட்டாயம் கம்பேக் கொடுக்க போகிறார் என ரசிகர்களுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. எனவே, இந்த முறையும் 6 மாதத்திற்கு பிறகு ஆல்யா புதிய சீரியலில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.