இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தெலுங்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் உப்பென்னா. விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக, தற்போது பிரபலமாகி வரும் கிரீத்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் இயக்குனர் சுகுமாருடன் அமர்ந்து இவர் சீரியஸாக விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் திரைக்கதையில் இயக்குனர் சுகுமாருக்கு உதவியாக இருந்து புச்சிபாபு பணியாற்றுகிறார் என்கிற செய்தியும் வெளியானது.
இந்த தகவல் இயக்குனர் புச்சிபாபுவின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த செய்தியில் உண்மை இல்லை என உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் புச்சிபாபு, “அந்த புகைப்படத்தில் என்னுடைய படத்தின் கதை குறித்து இயக்குனர் சுகுமாருடன் நான் விவாதித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இயக்குனர் சுகுமாருக்கு திரைக்கதையில் உதவும் அளவிற்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை..” என்று கூறியுள்ளார் புச்சிபாபு