அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
திருச்சி : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
திருச்சியில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி, கடந்த 24ம் தேதி முதல், கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி, மாஸ்டர் பிரிவில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் வகை போட்டிகளில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு, இலக்கை நோக்கி சுட்டார்.
இதில், நடிகர் அஜித் குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் வெண்கல பதக்கமும் என 6 பதக்கங்களை வென்றது.
அஜித்குமார் உட்பட மூன்று பேர் கலந்த கொண்ட போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களை வென்று உள்ளதாக, ரைபிள் கிளப் தரப்பில் தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது.