நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கி வரும் பான்--இந்தியா படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. அந்த வருடத்திலேயே இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து 2024ல் முடிக்க உள்ளார்களாம். சுமார் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.