திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கி வரும் பான்--இந்தியா படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. அந்த வருடத்திலேயே இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து 2024ல் முடிக்க உள்ளார்களாம். சுமார் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.