நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்த அருண் ராஜா காமராஜ், அதையடுத்து பல படங்களில் நடித்தும், பாடியும் வந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக அவரது மனைவி இறந்ததால் சில காலம் சோர்வாக காணப்பட்ட அருண் ராஜா காமராஜ், அதிலிருந்து மீண்டு வந்து உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருக்கு அருகே தன் தாயாருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதையடுத்து ஆடி மாசத்தில் ஆடி கார் வாங்கிய அருண் ராஜா காமராஜுக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.