ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமவுலி படம் என்பதால் மட்டுமே பான் இந்திய திரைப்படம் என்கிற அளவில் ரிலீசானது. அதேசமயம் அதற்கு அடுத்ததாக வெளியான கேஜிஎப், புஷ்பா போன்ற திரைப்படங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தியே பான் இந்தியா ரிலீஸாக வெளியாகின. அப்படி வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தையும் அதே அளவிற்கு வெற்றி பெற செய்யும் விதமாக, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுகுமாரும், அல்லு அர்ஜுனும்.. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் இணைந்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சுகுமாரும் உப்பென்னா இயக்குனரும் இணைந்து திரைக்கதை பற்றி விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.