திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமவுலி படம் என்பதால் மட்டுமே பான் இந்திய திரைப்படம் என்கிற அளவில் ரிலீசானது. அதேசமயம் அதற்கு அடுத்ததாக வெளியான கேஜிஎப், புஷ்பா போன்ற திரைப்படங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தியே பான் இந்தியா ரிலீஸாக வெளியாகின. அப்படி வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தையும் அதே அளவிற்கு வெற்றி பெற செய்யும் விதமாக, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுகுமாரும், அல்லு அர்ஜுனும்.. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் இணைந்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சுகுமாரும் உப்பென்னா இயக்குனரும் இணைந்து திரைக்கதை பற்றி விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.