திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்கிற படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ராம் இயக்கிய தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் வசந்த் ரவியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்தே ஜெயிலர் படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.