ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவை அந்த சமயத்தில் கமர்சியல் கதைகளில் நடிக்க சில இயக்குனர்கள் முண்டியடித்தனர். ஆனால் அவரோ, நான் எக்காரணம கொண்டும் கமர்சியல் கதைகளில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன். ஆழமான கருத்து கொண்ட கதைகளில்தான் நடிப்பேன் என்று அடுக்கு மொழிகளில் பேசி வந்தார். விளைவு அதன்பிறகு அம்மணியை எந்த இயக்குனர்களுமே சீண்டவில்லை. அதனால் இப்போது எக்குத்தப்பாக பேசுவதை குறைத்து விட்டு, எசகுபிசகான காட்சிகளில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வரும் கண் பேசும் வார்த்தைகள் என்ற படத்தில் கிளுகிளு காட்சிகளில் நடித்துள்ளார் இனியா. அதில் ஒரு படுக்கையறை காட்சியில், செந்திலுடன் அதிக நெருக்கமாக, நடித்துள்ளாராம். இனியா இந்த திடீர் பயர் கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, மேலும் சில இயக்குனர்கள் செக்ஸியான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.