ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சின்னத்திரை நடிகையான ஆனந்தி தனது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பென்சில் ஆர்ட் முறையில் ஆனந்தி வரையும் ஓவியங்களை அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதில், சிலவற்றில் ரொமாண்ஸ் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து சக நடிகைகளும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போல் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ள ஆனந்தி, கேப்ஷனில் 'மழை வந்தாலே ரொமாண்ஸ் மூட் வந்துவிடுகிறது' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரபல சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், 'ஆஹான்... ஆர்யாவுக்கு தம்பி பாப்பா வா' என கேட்டு பதிவிட்டுள்ளார். அதை ஆமோதிப்பது போல் நடிகை நக்ஷத்திராவும் கமெண்ட் அடித்து ஆனந்தியை கலாய்த்துள்ளார்.