ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல் சார்பாக திரையுலகை சேர்ந்தவர்கள் முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், டைரக்டர் அமீர் தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கமலின் உருக்கமான பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனது விளக்கத்தை கொடுத்துவிட்டார். மேலும் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல்ஹாசன் பேசி ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டால், அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று மாலை 4 மணியளவில் 24 முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களை கமல் சார்பில் டைரக்டர் அமீர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் விஸ்வரூபம் பட விவகாரத்தில் ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்றும், இனி இப்பிரச்னை மேலும் வளராது என்றும் அமீர் கூறினார். இந்த சந்திப்பின்போது அமீருடன் கமலின் சகோதரர் சந்திரஹாசனும் பங்கேற்க உள்ளார்.