நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகிறது. இதில் தேஜஸ்வனி கவுடா, நிஹாரிகா ஹர்ஷூ, புவியரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மேலும் சுவராசியத்தை கூட்டும் வகையில் நீதிமன்றம் எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் நீதிபதி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் நீதிமன்ற காட்சிகள் என்றாலே மிகவும் காமெடியாகவும், அதேசமயம் புத்திசாலித்தனமான வாதங்களும் இருக்கும். தற்போது அவரே நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சீரியலின் டிஆர்பியிலும் பாக்யராஜ் என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.