நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் புரமோஷன் சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து தெலுங்கில் தான் நடித்த புஷ்பா, சீதா ராமம் போன்ற படங்களின் புரமோஷன் சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சோசியல் மீடியாவில் தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்ற போது எதற்காக கலந்து கொள்ளவில்லை? என்று ஒரு ரசிகர் அவரிடம் கேட்டபோது, பல கமிட்மெண்டுகள் இருந்த காரணத்தால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என என்னை சென்னையில் நடக்கும் எனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்கப் போகிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.