ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஸ்வரூபம் படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த பிரச்னைக்கு முடிவு காண, கமல் சார்பாக திரையுலகினர், முஸ்லிம் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆகவிட்டால் தான் இந்த மாநிலத்தை விட்டே போய்விடப்போவதாக கமல் நேற்று அறிவித்தார். கமலின் இந்த அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து திரையுலகினர் பலரும் கமலை நேரில் சந்தித்து பேசினர். இதற்கிடையே இந்தியில் விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்காக கமல் மும்பை சென்றுள்ளார்.
இந்நிலையில் தமிழ்திரையுலகினர் சார்பில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா, சிவக்குமார் ஆகியோர் பேசும்போது, விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்து தொடர்பாக கமல் சார்பில் திரையுலகில் இருக்கும் நாங்கள் முஸ்லிம் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த விவகாரத்தில் தற்போது முதல்வர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கிறது. கமல் தரப்பினரும், முஸ்லிம் அமைப்பினரும் பேசி ஒரு சுமூக முடிவை எடுக்கும்படி கூறியிருக்கிறார். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். முஸ்லிம் அமைப்புகளுடன் பேசி சீக்கிரத்தில் இந்த பிரச்னைக்கு முடிவு காண்போம் என்றனர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகை ராதிகா, சிவக்குமார் ஆகியோருடன் டைரக்டர்கள் பாலா, அமீர், நடிகர்கள் பிரபு, கார்த்தி, சூர்யா, பிரசன்னா ஆகியோரும் உடன் இருந்தனர்.