ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை வரலாற்றில் இதுவரை பார்த்திராத அளவில் 4 மணி நேர சீரியல் கிளைமாக்ஸ் ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளனர். ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக பிரபலமான 'செம்பருத்தி' தொடர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1420 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும். மேலும், நேயர்கள் எதிர்பார்த்திராத வகையில் 16 திருப்பங்களுடன் ஜீ தமிழின் மற்ற சீரியல்களின் கதாநாயகிகளும் இந்த பிரம்மாண்ட கிளைமாக்ஸில் பங்கேற்க உள்ளனர். இதனால் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.