வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் |
சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீநிதி சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சீரியல்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது கவுன்சிலிங்கிற்கு பிறகு சமூகவலைதளத்தில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள அவர் பாசிட்டிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீநிதியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஸ்ரீநிதியையும் அவர் அக்காவையும் அவரது தாயார் தான் தனியாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைப்பருவத்தின் போது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீநிதி, 'அப்பா இனி உங்களை மிஸ் செய்யவே மாட்டேன். நீங்கள் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன். லவ் யூ அப்பா' என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள் சிலர் ஸ்ரீநிதிக்கு ஆதரவான வார்த்தைகளை கமெண்ட் பாக்சில் உதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்ரீநிதி விரைவில் சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.