இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலுடன் ஆக்ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளவர் ஆகன்ஷா புரி. இந்தி சின்னத்திரை நடிகையான இவர் 'விநாயகர்' என்ற தமிழ் தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழில் ஆர்யா சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது போன்று பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றை தனியார் சேனலில் நடத்தினார். இதில் 12 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆகன்ஷா புரியை மணமகளாக தேர்வு செய்தார் மிகா சிங்.
சுயம்வர நிகழ்ச்சியிலேயே மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பாடகர் மிகா சிங், பிரபல பாடகர் தாலர் மெகந்தியின் சகோதரர். மிகா சிங்கும், ஆகன்ஷா பூரியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.