உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் காமெடி கலக்கல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 அண்மையில் முடிவுக்கு வந்தது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்ல, தர்ஷன் மற்றும் அபிராமி ரன்னர்-அப் பட்டத்தை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயித்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில பிரபலங்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் கோமாளியாக அசத்திய புகழுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினர். அதை வாங்கிய புகழ், 'நான் எப்போதாவது தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனவே இந்த தொகையை பாலாவுக்கு கொடுக்கிறேன்' என விட்டுக்கொடுத்தார். ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவுக்காக உதவி வரும் பாலா, அந்த பணத்தை குழந்தைகளுக்காக தரப்போவதாக அறிவித்தார். உடனேயே ஸ்ருதிகா தனது 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையிலிருந்து 1 லட்ச ரூபாயை பாலாவுக்கு தருகிறேன் என்றார். புகழ் மற்றும் ஸ்ருதிகா வழங்கிய பணத்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த 1 லட்ச ரூபாய் பணத்தையும் பாலா பெரம்பூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பிற்காக வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனலில் வெற்றி பெற்றது ஸ்ருதிகாவாக இருந்தாலும் பாலா நேயர்கள் அனைவரது மனதையும் கவர்ந்து நல்லதொரு இடத்தை பிடித்துவிட்டார்.