மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் காமெடி கலக்கல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 அண்மையில் முடிவுக்கு வந்தது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்ல, தர்ஷன் மற்றும் அபிராமி ரன்னர்-அப் பட்டத்தை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயித்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில பிரபலங்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் கோமாளியாக அசத்திய புகழுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினர். அதை வாங்கிய புகழ், 'நான் எப்போதாவது தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனவே இந்த தொகையை பாலாவுக்கு கொடுக்கிறேன்' என விட்டுக்கொடுத்தார். ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவுக்காக உதவி வரும் பாலா, அந்த பணத்தை குழந்தைகளுக்காக தரப்போவதாக அறிவித்தார். உடனேயே ஸ்ருதிகா தனது 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையிலிருந்து 1 லட்ச ரூபாயை பாலாவுக்கு தருகிறேன் என்றார். புகழ் மற்றும் ஸ்ருதிகா வழங்கிய பணத்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த 1 லட்ச ரூபாய் பணத்தையும் பாலா பெரம்பூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பிற்காக வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனலில் வெற்றி பெற்றது ஸ்ருதிகாவாக இருந்தாலும் பாலா நேயர்கள் அனைவரது மனதையும் கவர்ந்து நல்லதொரு இடத்தை பிடித்துவிட்டார்.