ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் ஆதித்யா, நிவேதா, கமலி நடிக்கும் படம் மறு விசாரணை. வி.எஸ்.விஜயகோபால் இயக்குகிறார். மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் வி.எஸ்.விஜயகோபால். மேலும் அவர் மேலும் கூறியதாவது: நான் படிக்கும் காலத்தில் 5 வருடங்கள் சிறையில் இருந்த ஒரு டாக்டரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் அவர் சிறையில் வாழ்ந்த 5 வருட வாழ்க்கையை யாரால் திருப்பித் தரமுடியும் என்பதை யோசித்தேன். அதுதான் இந்தப் படம். அவர் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்வதால் படத்துக்கு மறு விசாரணை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதை கிராமத்து க்ரைம் த்ரில்லர் என்று சொல்லலாம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து விட்டது. பிப்ரவரியில ரிலீஸ் பண்ணப்போறோம் என்கிறார்.