ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல், விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் படங்களை இயக்கினார். இதில் வானம் வசப்படும் தோல்வியை சந்தித்தது. மற்றும் அந்த படத்தின் ஒளிப்பதிவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்த நிலையில் இனி படம் இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் பேட்டியளித்துள்ள பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நானும் இயக்குனராகும் ஆசையில் சில படங்களை இயக்கினேன். ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. ஒரு படத்தை இயக்குவது வேறு, ஒளிப்பதிவு செய்வது வேறு என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இயக்குனர் என்பவர் அனைத்து துறைகளையும் கையாள வேண்டும், அது என்னால் முடியவில்லை. அதனால் இனி படம் இயக்கப்போவதில்லை.
ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறேன். முழு கதையும் எனக்கு சொல்லப்பட வேண்டும், அந்த கதை எனக்கு பிடிக்க வேண்டும். எனது பணிக்கு முழு சுதந்திரம் வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பணி செய்வேன்.
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.