ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல், விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் படங்களை இயக்கினார். இதில் வானம் வசப்படும் தோல்வியை சந்தித்தது. மற்றும் அந்த படத்தின் ஒளிப்பதிவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்த நிலையில் இனி படம் இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் பேட்டியளித்துள்ள பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நானும் இயக்குனராகும் ஆசையில் சில படங்களை இயக்கினேன். ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. ஒரு படத்தை இயக்குவது வேறு, ஒளிப்பதிவு செய்வது வேறு என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இயக்குனர் என்பவர் அனைத்து துறைகளையும் கையாள வேண்டும், அது என்னால் முடியவில்லை. அதனால் இனி படம் இயக்கப்போவதில்லை.
ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறேன். முழு கதையும் எனக்கு சொல்லப்பட வேண்டும், அந்த கதை எனக்கு பிடிக்க வேண்டும். எனது பணிக்கு முழு சுதந்திரம் வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பணி செய்வேன்.
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.