ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலக்காடு : ''திரைப்பட பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என, விருது பெற்ற நஞ்சியம்மா பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனர் சாச்சிக்கும், சிறந்த துணை நடிகராக, அதில் நடித்த பிஜூ மேனனுக்கும், பின்னணி பாடகி விருது நஞ்சியம்மாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், அப்படத்தில் பாடிய 'கலக்காத்த சந்தனமேரி வெகுவூக பூத்திருக்கு' என்ற பாடல் மிகப்பிரபலம். இதுகுறித்து, நஞ்சியம்மா கூறுகையில், ''என் மனதை தொட்ட பாடல் இது. இதை நானே எழுதி பாடினேன். இசை ரசிகர்கள் எல்லோர் மனதிலும் இப்பாடல் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என்றார்.