சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஸ்வரூபம் படத்தை இந்தியில் ரிலீஸ் செய்வதற்காக மும்பை சென்றார் நடிகர் கமல்ஹாசன். விஸ்வரூபம் படத்திற்கு எழுந்துள்ள சிக்கல் தமிழகத்தில் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகவிட்டால் தனக்கு ஒரு வீடு கூட இருக்காது என்றும், இப்படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் தமிழகத்தை விட்டே தான் வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கமல் நேற்று உருக்கமாக பேட்டியளித்தார். கமலின் இந்த உருக்கமான பேச்சை அடுத்து ஏராளமான ரசிகர்களும், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கமல வீட்டை நோக்கி முற்றுகையிட்டனர். இதனால் கமல் வீட்டு முன்பே ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கமல், ரசிகர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டு கொண்டார். மேலும் இந்தி விஸ்வரூபத்திற்காக தான் மும்பை செல்ல இருப்பதாகவும், அங்கு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு வெற்றியோடு திரும்புவேன் என்று கூறினார்.
பிப்ரவரி 1ம் தேதி (நாளை) விஸ்வரூபம் படம் இந்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்காக கமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்றார். அங்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையை முடித்துவிட்டு திங்கள் அன்று வருவார் என தெரிகிறது. இதற்கிடையே விஸ்வரூபம் படத்தை 2ம் தேதி டி.டி.எச்.இல் வெளியிடுவதாக கமல் கூறியிருந்தார். ஆனால் இப்போது நிலவும் சூழலால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. மேலும் ஏற்கனவே டி.டி.எச். பிரச்னைக்கு இந்தியில் எதிர்ப்பு கிளம்பியது மற்றும் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல் போன்றவற்றால் விஸ்வரூபம் படம் அங்கும் சுமூகமான முறையில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுத்தமாக இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. தென்னிந்தியாவின் பிறமாநிலங்களில் பதட்டமான சூழலில் ரிலீஸ் ஆவதும், பாதியில் நிறுத்தப்படுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இப்போது இந்தி ரிலீஸ்க்காக மும்பை சென்றுள்ளார். அங்காவது அவருக்கு வெற்றி கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!