ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |
"விஸ்வரூபம் படம் வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, தமிழக முஸ்லிம் சிந்தனையாளர்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை: குரானையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில், விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இத்தடையை, நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பின்பும், அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என, மேல்முறையீடு செய்து தடை பெற்றதுள்ளது, சந்தேகங்களை எழுப்புகிறது. நபிகளுக்கும், அவரை ஏற்க மறுத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில், வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம்,ஒழுங்கைக் காரணம் காட்டி, விஸ்வரூபம் படம் வெளியாக தடை விதிப்பதை, பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனவே, சமூக நல்லிணக்கத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும், விஸ்வரூபம் படம் தடையின்றி வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இவ்வாறு, அப்துல் அமீது கூறியுள்ளார்.