நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மீ டூ புகார்கள் அதிகமாக வெளிவந்த நேரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது இயக்குனர் லீனா மணிமேகலை புகார் அளித்தார். இந்த புகாரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறி சுசி கணேசன் சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் லீனா மணிமேகலை ஆஜராகவில்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மணிமேகலை இந்த வழக்கில் ஆஜராக மாட்டார். அவர் இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மதிக்காதவர் அதனால் அவர் இல்லாமலேயே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக லீனா மணிமேகலை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ககூடாது என்று சுசிகணேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.