மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து, படையப்பா என்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதையடுத்து அவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த ராணா படம் தொடங்கப்பட்டபோது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அவர்கள் லிங்கா படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் முதல் இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் அதிர்ச்சி தோல்வி கொடுத்தது. அதையடுத்து அவர்கள் இணையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லிங்கா படம் தோல்வி அடைவதற்கு ரஜினி, தயாரிப்பு நிறுவனம் எடுத்த சில முடிவுகளும் காரணம் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அது குறித்து அவர் கூறுகையில், லிங்கா படத்திற்கு முதலில் கிளைமேக்ஸை வேறு விதமாகதான் வைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை பார்த்த ரஜினி அதில் மாற்றம் செய்ய சொன்னார். முதலில் இந்த படத்தில் பலூன் காட்சிகள் எல்லாம் இடம் பெறவில்லை. ரஜினி சொன்னதால் அந்த காட்சிகளை படமாக்கினோம். அதுமட்டுமின்றி படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று தயாரிப்பு துறை இன்னொரு பக்கம் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்திருந்த கிளைமேக்ஸை படமாக்காமல் படத்தை முடித்தோம் என்று கூறியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.