நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர். 2012ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் கரீனா இரண்டாவதாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது கரீனா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என பாலிவுட் மீடியாக்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்தன. அவற்றை கரீனா மறுத்துள்ளார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில், “நான் கர்ப்பம் இல்லை. தான் ஏற்கெனவே இந்திய மக்கள் தொகைக்கு நிறைய செய்துவிட்டேன் என சைப் சொன்னார்” என கொஞ்சம் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
சைப் அலிகான் அவரது முதல் மனைவி நடிகை அம்ரிதா சிங் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் சாரா அலிகான் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை. மகன் இப்ராஹிம் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
சைப் அலி கானுக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று மகன்கள், ஒரு மகள் இருப்பதைத்தான் கரீனா கபூர் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.