நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை விழாக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டே இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். அப்போது கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் இந்தியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகிய இரு சமூகங்களும் ஒருமனதாக ஒன்றாகக் கொண்டாடுவது ஒரு உற்சாகமான உணர்வு. என்கிறார் சமந்தா.
விழா இயக்குனர் மிது பௌமிக் லாங்கே கூறியதாவது: சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவர் படவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார். அவரை நாங்கள் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவில் அவரது பணிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.