பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை விழாக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டே இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். அப்போது கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் இந்தியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகிய இரு சமூகங்களும் ஒருமனதாக ஒன்றாகக் கொண்டாடுவது ஒரு உற்சாகமான உணர்வு. என்கிறார் சமந்தா.
விழா இயக்குனர் மிது பௌமிக் லாங்கே கூறியதாவது: சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவர் படவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார். அவரை நாங்கள் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவில் அவரது பணிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.