நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எல்லா முன்னணி நடிகர்களும் தங்கள் வாரிசை சினிமா நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது மாதவன் மட்டும் தன் மகனை தேசத்தக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி வருகிறார். அவரது மகன் வேதாந்த் நீச்சல் வீரராக வேகமாக வளர்ந்து வருகிறார். மகன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துபாயில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேதாந்துக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு வேதாந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். முந்தைய சாதனையான 16:06:43 என்பதை 16:01:73 என்கிற அளவில் முறியடித்துள்ளார். இதனை மாதவன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.