நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் இவர் நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்டார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜா அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கச்சேரி நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.
இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எம்.பி., பதவி மற்றும் பிரதமர் மோடி குறித்த அவரின் பாராட்டு ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.