மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே நேர்மையான படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில நடிகர்களும் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது இமேஜ் தான் முக்கியம், வசூல் தான் முக்கியம் என்ற நினைப்புடனேயே இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் உள்ள நடிகர்களில் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்தவர். கமல்ஹாசன் 70 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அஜித் 50 வயதைக் கடந்தவர், விஜய் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். இவர்கள் அனைவருமே தங்கள் வயதை விட பாதி வயது குறைந்தவர்களுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் 50 வயது ஹீரோக்கள் கல்லூரி மாணவர்களாக நடித்ததைப் போலத்தான் இதுவும் பொருத்தமற்ற ஒரு விஷயம். திரையிலேயே இவர்களது வயது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கும் போது மிகவும் வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து திரையில் நடனமாடும் போது சிரிப்புத்தான் வருகிறது. அதிலும் காதல் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விக்ரமிற்கு வயது 56, ராஷ்மிகாவுக்கு வயது 26. இருவரது ஜோடிப் பொருத்தத்தை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. விக்ரம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். ராஷ்மிகா சிறிய உருவம் கொண்டவர். விக்ரம், ராஷ்மிகா இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்த்தால் யானை பக்கத்தில் மான் இருப்பதைப் போலத்தான் இருக்கும்.
தமிழ் சினிமாவை சில இளம் இயக்குனர்கள் வேறொரு பாதையில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். அவர் இதையெல்லாம் யோசிக்க மாட்டாரா என்ன ?.