நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெப்சீரிஸில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் பிரிகிடா. உலகின் முதல் லான்-லீனியர் படமாக பார்த்திபன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான ‛இரவின் நிழல்' படத்தில் உதவி இயக்குனராக சேரப்போனவர் அந்த படத்தில் நாயகியாகவும் மாறினார். படத்தின் தலைப்பை போல் இப்போது பார்த்திபனின் நிழலாக வலம் வருகிறார் அம்மணி. கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் நடந்த பட பிடிப்பில் அந்த யூனிட் முழுக்கவே இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டு வேளைகளில் பார்த்திபன் இருந்த போதும் அவருடனே இருந்து பட வேலைகளை கவனித்து வந்தார்.
பத்திரிக்கையாளர் காட்சி அன்றும் பார்த்திபன் கூடவே காரில் வந்து இறங்கினார். படம் வெளியீடு அன்று காலை 4 மணி காட்சியிலும் பார்த்திபன் கூடவே அட்டை போல ஒட்டி கொண்டு நின்றார். படத்தின் எல்லா புரொமோஷன்களிலும் பிரிகிடா இல்லாமல் இல்லை. பார்த்திபன் யார் பேர் முதலில் சொல்கிறாரோ இல்லையோ பிரிகிடா பேர் முதலில் வரும். அந்தளவுக்கு பார்த்திபன் போகும் இடமெல்லாம் அவரின் நிழலாகவே வலம் வருகிறார்.
இந்த படம் வெற்றிக்காக சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் திருப்பதி சென்றிருந்தார். அப்போதும் அவருடன் பயணித்தார் பிரிகிடா. இந்த படத்தில் அவர் நிர்வாணக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல சமீபத்தில் ஒரு பேட்டியில் சேரி தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையானது. இந்த விஷயத்திற்கு பிரிகிடா மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து பார்த்திபனும் அவர் சார்பாக தனது வருத்தத்தை பதிவு செய்தார்.