ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வெப்சீரிஸில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் பிரிகிடா. உலகின் முதல் லான்-லீனியர் படமாக பார்த்திபன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான ‛இரவின் நிழல்' படத்தில் உதவி இயக்குனராக சேரப்போனவர் அந்த படத்தில் நாயகியாகவும் மாறினார். படத்தின் தலைப்பை போல் இப்போது பார்த்திபனின் நிழலாக வலம் வருகிறார் அம்மணி. கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் நடந்த பட பிடிப்பில் அந்த யூனிட் முழுக்கவே இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டு வேளைகளில் பார்த்திபன் இருந்த போதும் அவருடனே இருந்து பட வேலைகளை கவனித்து வந்தார்.
பத்திரிக்கையாளர் காட்சி அன்றும் பார்த்திபன் கூடவே காரில் வந்து இறங்கினார். படம் வெளியீடு அன்று காலை 4 மணி காட்சியிலும் பார்த்திபன் கூடவே அட்டை போல ஒட்டி கொண்டு நின்றார். படத்தின் எல்லா புரொமோஷன்களிலும் பிரிகிடா இல்லாமல் இல்லை. பார்த்திபன் யார் பேர் முதலில் சொல்கிறாரோ இல்லையோ பிரிகிடா பேர் முதலில் வரும். அந்தளவுக்கு பார்த்திபன் போகும் இடமெல்லாம் அவரின் நிழலாகவே வலம் வருகிறார்.
இந்த படம் வெற்றிக்காக சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் திருப்பதி சென்றிருந்தார். அப்போதும் அவருடன் பயணித்தார் பிரிகிடா. இந்த படத்தில் அவர் நிர்வாணக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல சமீபத்தில் ஒரு பேட்டியில் சேரி தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையானது. இந்த விஷயத்திற்கு பிரிகிடா மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து பார்த்திபனும் அவர் சார்பாக தனது வருத்தத்தை பதிவு செய்தார்.