மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் மணிரத்னம்(66) தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்பட்டவர். தற்போது கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் மணிரத்னத்திற்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா என முதலில் தகவல் பரவியது. ஆனால் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் கோவிட் அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.