மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி |
இயக்குனர் மணிரத்னம்(66) தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்பட்டவர். தற்போது கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் மணிரத்னத்திற்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா என முதலில் தகவல் பரவியது. ஆனால் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் கோவிட் அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.